சீன வீரர்களுடனான கல்வான் மோதல் எதிரொலி - வீரர்களுக்கு ஆயுதமின்றி போர் பயிற்சி

November 1, 2022

சீன வீரர்களுடனான கல்வான் மோதல் எதிரொலி காரணமாக வீரர்களுக்கு ஆயுதமின்றி போர் பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம், லடாக்கின் கிழக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்கள் ஊடுருவ முயன்றனர். இதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இந்த மோதலின்போது, சீன வீரர்கள் கற்கள், ஆணி பதிக்கப்பட்ட கம்புகள், இரும்பு கம்பிகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி இந்திய வீரர்களை தாக்கியது தெரியவந்தது. இந்நிலையில், வீரர்களுக்கான அடிப்படை பயிற்சி முறையில் ஐடிபிபி மாற்றங்களை […]

சீன வீரர்களுடனான கல்வான் மோதல் எதிரொலி காரணமாக வீரர்களுக்கு ஆயுதமின்றி போர் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம், லடாக்கின் கிழக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்கள் ஊடுருவ முயன்றனர். இதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இந்த மோதலின்போது, சீன வீரர்கள் கற்கள், ஆணி பதிக்கப்பட்ட கம்புகள், இரும்பு கம்பிகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி இந்திய வீரர்களை தாக்கியது தெரியவந்தது.

இந்நிலையில், வீரர்களுக்கான அடிப்படை பயிற்சி முறையில் ஐடிபிபி மாற்றங்களை செய்துள்ளது. இதன்படி, ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா பயிற்சி மையத்தில் ஆயுதமின்றி போரிடுவதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. ஜுடோ, கராத்தே மற்றும் க்ராவ் மகா (இஸ்ரேல் தற்காப்புக் கலை) ஆகிய தற்காப்புக் கலை உட்பட மொத்தம் 15 முதல் 20 வகையான ஆயுதமில்லா போர் நுட்பங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதுவரை 20 ஆயிரம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐடிபிபி ஐஜி ஈஷ்வர் சிங் துஹான் கூறுகையில், இந்த பயிற்சியில் எதிரியின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வது, பதில் தாக்குதல் நடத்துவது குறித்த நுட்பங்கள் சொல்லித் தரப்படுகிறது. இந்த பயிற்சி பெற்ற வீரர்களால் எதிரியை நகர விடாமல் செயலிழக்க செய்ய முடியும் என்றார். இதுதவிர, கடும் பனிப்பொழிவு, பனிமலைகள், ஆக்சிஜன் குறைவு உள்ளிட்ட கடினமான சூழல் நிலவும் பகுதிகளில் பணிபுரியும் வீரர்களின் உடல் திறனை மேம்படுத்தும் வகையில் சிறப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu