10,11,12 ஆம் வகுப்பு பொது தேர்வு நிறைவு பெற்றதும் அதற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி அடுத்த மாதம் 1ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு 22ஆம் தேதியிலும், 11ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு 25ஆம் தேதியும் தேர்வு நிறைவு பெறுகிறது. அதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் மாணவ மாணவிகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் எப்போது தொடங்கும் என்ற தகவலை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 13ஆம் தேதி வரையிலும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 6ம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 12ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையிலும் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிகள் நிறைவு அடைந்ததும் மதிப்பெண்கள் ஆன்லைன் வாயிலாக வெளியிடப்படும்.