ஸ்ரீவைகுண்டத்தில் ரயிலில் சிக்கி தவிக்கும் பயணிகளை மீட்கும் பணி தீவிரம்

December 19, 2023

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை காரணமாக ரயில் பாதைகளில் மண அரிப்புகள் ஏற்பட்டுள்ளது. நெல்லை,தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகள் துண்டிக்கப்பட்டு தீவு போலானது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் ரயில் பாதைகளில் மண் அரிப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அங்கு மண் அரிப்பு காரணமாக போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது. ஆனால் திருச்செந்தூரில் இருந்து கிளம்பிய ரயில் ஸ்ரீவைகுண்டம் […]

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை காரணமாக ரயில் பாதைகளில் மண அரிப்புகள் ஏற்பட்டுள்ளது.

நெல்லை,தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகள் துண்டிக்கப்பட்டு தீவு போலானது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் ரயில் பாதைகளில் மண் அரிப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அங்கு மண் அரிப்பு காரணமாக போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது. ஆனால் திருச்செந்தூரில் இருந்து கிளம்பிய ரயில் ஸ்ரீவைகுண்டம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில்வே தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக தண்டவாளம் அந்தரங்கத்தில் தொங்குவதை பார்த்த என்ஜின் டிரைவர் ரயிலில் சாதுரியமாக நிறுத்தினார். இதனால் அதிர்ஷ்டவசமாக 800 பயணிகள் உயிர்த்தப்பினர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ரயில் நிலையத்தில் இருந்த 300 பயணிகள் பஸ்கள், வேன்கள் ஆகியவை மூலம் மீட்கப்பட்டனர். மேலும் அவர்கள் பாதுகாப்பாக அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 500 பேர் பயணிகளை மீட்கும் பணியில் மூன்றாவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலைக்குள் பயணிகள் அனைவரும் மீட்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பயணிகளுக்கு உணவுகள் வழங்க ஏற்படு செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் நெல்லை, மதுரைக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu