எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரப் போராட்டம் நடைபெற்றது.
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 1300 பேரை பதிவியிறக்கம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தலைமையாசிரியர்கள் வந்தனர். காலையிலிருந்து மழை பெய்து வந்த நிலையிலும் ஆசிரியர்கள் சோர்வடையாமல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தனர்.