எகிப்து நாட்டில், கடந்த ஜனவரி மாதம் பணவீக்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் 21.9% ஆக இருந்த பணவீக்கம் ஜனவரி மாதத்தில் 26.5% உயர்ந்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்குவதற்கு முன்னர், எகிப்தின் பணவீக்கம் 8% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான எகிப்து பவுண்டு மதிப்பு, கடந்த ஒரு வருடத்தில் 50% க்கும் அதிகமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக, கடந்த மாதம் முதல் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் கடும் உயர்வு காணப்படுகிறது. குறிப்பாக, பிரட் மற்றும் சிறுதானியங்களின் விலை 6.6% க்கும் மேலாக அதிகரித்துள்ளது. மேலும், இறைச்சி மற்றும் அசைவம் சார்ந்த பொருட்களின் விலை 20.6% உயர்ந்துள்ளது. இதனால், எகிப்து நாட்டின் நடுத்தர வர்க்க மக்கள், தங்கள் உணவு தேவைக்காக அரசாங்கத்தின் மானியத்தை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 30% எகிப்து நாட்டினர் ஏழ்மை நிலையில் உள்ளதாக அந்நாட்டின் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.