ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள காலாண்டு நிதிநிலை அறிக்கைப்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 62% உயர்ந்து, 741 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், நிறுவனத்தின் இயக்க வருவாய் 29% உயர்ந்து, 3721 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் EBITDA மதிப்பு 48% உயர்ந்து, 857 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, தேசிய பங்குச் சந்தையில், ஈச்சர் நிறுவனத்தின் பங்குகள் 3249.5 ரூபாய் வர்த்தகமானது.
ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், சுமார் 5.4 லட்சம் எண்ணிக்கையில், 350cc வரையிலான புதிய வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 54% உயர்வாகும். அதே வேளையில், 350cc க்கு மேற்பட்ட வாகன விற்பனை 16% உயர்ந்து, 75781 எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மொத்த ஈச்சர் வாகன விற்பனை 48% உயர்ந்து, 6.16 லட்சம் எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.