ஈகுவேடார் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் பலியாகினர்.
ஈகுவேடார் நாட்டின் பாஸ்தஜா மாகாணத்தில் டிவினோ மாவட்டம் உள்ளது. அங்கு கனமழை காரணமாக கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. மக்கள் பாதுகாப்புக்காக வேறு இடங்களுக்கு மீட்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான மருந்து, உணவு, போர்வை போன்ற நிவாரண பொருட்களை வழங்க ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நேற்று புறப்பட்டு சென்றது. அந்த ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐந்து வீரர்கள் பலியாகினர். மேலும் பொதுமக்கள் மூன்று பேர் பலியாகினர். அவர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். இந்த விபத்து குறித்து விசாரிக்க விசாரணை குழு ஒன்றை ஈகுவேடார் ராணுவம் அமைத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.