அரியானாவைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி பளு தூக்குதலில் ஆசிய அளவில் சாதனை படைத்துள்ளார்.
அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியை சேர்ந்த அர்ஷியா கோஸ்வாமி தனது சிறு வயது முதல் பளு தூக்குதலில் மிகுந்த ஆர்வம் உடையவர். இதனால் அதிக எடை கொண்ட பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார். தற்போது 60 கிலோ எடை தூக்கும் போட்டியில் ஆசிய அளவில் வென்று சாதனைப் படைத்தார் என இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.














