எகிப்து அதிபர் தேர்தலில் அப்தெல் பட்டா அல் சிசி மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
எகிப்தில் கடந்த 10 முதல் 12 ஆம் தேதி வரை அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதன்படி தற்போதைய அதிபரான அப்தெல் பட்டா அல் சிசி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு ஆதரவாக 89.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதையடுத்து அவர் எகிப்து நாட்டின் அதிபராக மூன்றாவது முறையாக பதவி ஏற்க உள்ளார். இவருக்கு மேற்கத்திய நாடுகளுடன் நெருங்கிய நட்புறவு உண்டு. இவர் மீது மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளன. எனினும் இவர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இவருடைய வெற்றிக்கு இந்திய பிரதமர் மோடி உட்பட பல உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.