இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் டெல்லியில் உள்ள ரங் பவன் ஆடிட்டோரியத்தில் அவரை தேர்தல் ஆணையத்தின் அடையாளமாக அங்கீகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 5 மாநிலங்களில், வரும் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மேகாலயா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் பிரச்சாரங்களில் ஈடுபட துவங்கி உள்ளன. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் பிரச்சாரத்தை மேற்கொள்ள சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்கு பல்வேறு பெருமைகளை பெற்றுத் தந்து, சர்வதேச அளவில் புகழ்பெற்ற சச்சின் டெண்டுல்கர், இதற்கான சரியான தேர்வாக கூறப்பட்டுள்ளார்.