பாராளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு முழுவதும் 93 கூடுதல் பணியிடங்களை உருவாக்க தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது.
விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் பணிகளுக்காக மாவட்ட வருவாய் அதிகாரி, துணை ஆட்சியர், தாசில்தார், துணை தாசில்தார், அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர் என 93 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதில் இளநிலை உதவியாளர் டைப்பிஸ்ட்,எழுத்தர், அலுவலக உதவியாளர்களுக்கு வழக்கமான அரசு ஊழியத்தை வழங்கலாம் என்று தேர்தல் துறை அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் துறை அதிகாரி தெரிவிக்கும் பொழுது பாராளுமன்ற தேர்தலின் போது பணிச்சுமைகள் அதிகமாக இருக்கும். குறிப்பாக வாக்குப்பதிவு முடிந்து ஓட்டு எண்ணிக்கை முடிக்கப்படும் வரை வேலை மிக அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடையும் காலமான ஜூன் 30 வரை கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 93 பனியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் அரசின் சில பணியிடங்களுக்கு ஊதியத்தை நியமிக்க முடியாத பட்சத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.