இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்திய தேர்தல் ஆணையர் கடந்த சனிக்கிழமை அன்று ராஜினாமா செய்துள்ளார்.
தனது பதவிக்காலம் மூன்றாண்டுகள் உள்ள நிலையில் ராஜிநாமா செய்துள்ளதால் அரசியல் மட்டங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டு உள்ளார். அருண் கோயல் பஞ்சாப் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.