வாக்காளர்களுக்கு யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பணபரிவர்த்தனை தளங்களான 'கூகுள் பே, போன் பே' உள்ளிட்ட செயலிகள் வாயிலாக பணம் வழங்குவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
கர்நாடகா உட்பட பல மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்கள் இந்த ஆண்டு நடக்க உள்ள நிலையில் 2024ல் லோக்சபா தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி சூர்யா சென் கூறுகையில், வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதைத் தடுப்பது பெரும் சவாலாக உள்ளது. நியாயமான முறையில் தேர்தலை நடத்த மேலும் பல நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும் 'போன் பே, ஓலா மணி, ஊபர் பே' உள்ளிட்டவற்றைக் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. வங்கிகள் வாயிலாக நடக்கும் அனைத்து பணபரிவர்த்தனைகளையும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.