மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 இடங்களுக்கு வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அசாம், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா 2 இடங்களுக்கும், ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 9 மாநிலங்களில் நடைபெறும் இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 14 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தல் வாக்குப்பதிவு செப்டம்பர் 3ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை மாலை 5 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.