பாகிஸ்தானில் பஜார் என்ற மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளரான ரேஹான் ஜெப் கான் என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் வரும் எட்டாம் தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானை ஒட்டிய ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பஜார் என்ற மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளரான ரேஹான் ஜெப் கான் என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவருக்கு முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆதரவு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அவருடன் இருந்த நான்கு உதவியாளர்களும் சுடப்பட்டனர். அவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் ஜெப் கான் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவருடைய உதவியாளர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சமீபத்தில் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. இதுவரை இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த எல்லைப் பகுதியில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.