மத்திய அரசு 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் என்ற திட்டத்தை கொண்டு வந்தது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் வகையில் 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு தேர்தல் பத்திரங்கள் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இதன் மூலம் அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் நிதி வழங்கப்படும். இது குறித்த எந்த தகவலும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக இந்த தகவலை பெற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.இதில் வெளிப்படை தன்மை இல்லை என வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற முடிந்த நிலையில் இதற்கான தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில் அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு நன்கொடை வழங்கப்படுகிறது என்பதை மக்கள் அறிந்து கொள்வது அவசியம். மேலும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக தகவல் அறியும் உரிமை மீறல் நியாயமானது அல்ல. இதனால் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவது சட்ட விரோதமாகும். அதன்படி இனி தேர்தல் பத்திரங்கள் செல்லாது என உத்தரவிடப்பட்டுள்ளது.