வாக்காளர் பட்டியல் இனி ஒவ்வொரு காலாண்டிலும் புதுப்பிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஜனவரி 1-ல் மட்டுமல்லாது ஏப்ரல் 1, ஜுலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று தொடர்ச்சியான தகுதியேற்படுத்தும் நாட்களில் இளைஞர்கள் அவர்களது விண்ணப்பங்களை முன்கூட்டியே வழங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும். மேலும் 18 வயது நிறைவடைந்த ஆண்டின் அடுத்த காலாண்டில் தகுதியான இளைஞர்கள் தங்களைப் வாக்காளர்கள் பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்கைக்குப் பிறகு, உரியவருக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க/நீக்க/திருத்த/இடம் மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் 05.01.2023-ஆம் தேதியிலிருந்து பெறப்படுவதாக கூறப்பட்டுள்ளது.