தமிழகம் முழுவதும் பழுதடைந்த நிலையில் உள்ள மின் மீட்டர்களை சரி செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது
தமிழகம் முழுவதும் சென்னை ,செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருச்சி ,நாகை ஆகிய ஐந்து மாவட்டங்களில் 10,000 க்கும் அதிகமான மின் மீட்டர்கள் பழுதாகி உள்ளன. இதனை உடனடியாக மாற்றி தரக் கோரி பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக மின்சார வாரிய பொறியாளர்களுக்கு தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சுற்றறிக்கையில், பொதுமக்களின் வசதிக்காகவும், உரிய வருவாய் ஈட்டவும் பழுதடைந்த மின் மீட்டர்களை மாற்றுமாறும் , அதனை மாற்றிய பிறகு அது குறித்த விவரங்களை மின்னஞ்சலில் அனுப்பவும் பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.