சென்னையில் 600 மின்சார பேருந்துகளுக்கான ஒப்பந்தம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் 625 வழித்தடங்களில் 3,436 அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன, மேலும் சுமார் 30 லட்சம் மக்கள் தினசரி பயணம் செய்கின்றனர். மகளிருக்கான கட்டணம் இல்லா சேவை, மாணவர்களுக்கு பஸ் பாஸ், முதியவர்களுக்கு சலுகைகள் உள்ளிட்ட பல திட்டங்களும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், மாநகர போக்குவரத்து கழகம் தற்போது சென்னையில் 600 மின்சார பேருந்துகளை தனியார்மயமாக்கி இயக்க ஒப்பந்தம் மூலம் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு இருந்தாலும், மின்சார பேருந்துகளுக்கான இயக்குநர் நியமனம், பராமரிப்பு மற்றும் ஓட்டுநர் நியமனம் Gross Cost Contract அடிப்படையில் தனியாரின் மூலம் மேற்கொள்ளப்படும். ஒப்பந்தப்புள்ளி படிவங்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்யப்படலாம், 10.3.2025 முதல் பதிவேற்றம் செய்யலாம், இறுதி தேதி 03.04.2025 மாலை 4 மணிவரை என அறிவிக்கப்பட்டுள்ளது.