இந்தியாவில் முதல் மின்சார விரைவு சாலை டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு அமைக்கப்படுகிறது.
இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், டெல்லி - மும்பை விரைவுச் சாலையில் முதல் மின்சார சாலை டெல்லியிலிருந்து ஜெய்ப்பூர் வரை அமைக்க திட்டமிடப்படுகிறது. இதன்மூலம், குறிப்பிட்ட அளவிலான நேரமும், பெட்ரோல் மற்றும் டீசல் செலவும் மிஞ்சும். இவற்றில் செல்லும் பேருந்துகள் மின்சார வயர்கள் மூலமாக இயங்கும். அதிநவீன தொழில்நுட்பம் இந்த போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட உள்ளது. இதுபோன்ற 26 மின்சார சாலைகள் நாடு முழுவதிலும் அமைக்கப்பட உள்ளன.
இந்த மின்சார விரைவுச் சாலை டெல்லி-ஜெய்ப்பூருக்கு முதலாவதாக அமைகிறது. சென்னைக்கும் ஒரு மின்சார சாலை அமைய உள்ளது. அநேகமாக இது, சென்னை - பெங்களூரூ விரைவுச் சாலையில் அமையும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர்.