மேகாலயாவில் முதன்முறையாக மின்சார ரயில்களை இயக்கி இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது.
இந்திய ரயில்வே 2030க்குள் நிலக்கரி பயன்பாட்டை கைவிடும் நோக்கில் பணியாற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், துத்னை -- மெண்டிபதர் ஒற்றை அகலப் பாதை மற்றும் அபயபுரி -- பஞ்சரத்னா இரட்டை அகலப் பாதையை மின் மயமாக்கி சாதனை படைத்துள்ளது. மேகாலயாவில் உள்ள மெண்டிபதர் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி 2014ல் திறந்து வைத்தார். தற்போது இந்த ரயில் நிலையம் மின் மயமாக்கப்பட்டதை அடுத்து மின் இன்ஜின் வாயிலாக இயங்கும் ரயில்களை மெண்டிபதரில் இருந்து நேரடியாக இயக்கலாம். மின் மயமாக்கலால் வட கிழக்கு மாநிலங்களில் ரயில்களின் இயக்கம் கணிசமாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.