புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு புதிய அறிவிப்பை மின் வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் புயல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில் புறநகர் பகுதிகளில் வெள்ளநீர் வடியாமல் காலதாமதம் ஏற்பட்டதால் பெரும்பாலான வீடுகளில் டிசம்பர் மாதம் மின் கணக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மின்கணக்கீடு செய்யாத நுகர்வோர்கள் அக்டோபர் மாதம் கணக்கீடு செய்யப்பட்டு செலுத்தப்பட்ட அதே தொகையை செலுத்தலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.