மின்சார கணக்கீட்டை தோராயமாக பதியக்கூடாது என்று மின்வாரிய ஊழியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை நிதி கட்டுபாட்டு அதிகாரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மின் கணக்கீட்டின் போது முறையான கணக்கீட்டிற்கு பதிலாக, உண்மை நிலைக்கு மாறான கணக்கீட்டை கணினியில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக களஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு கணக்கீட்டின் சரியான தன்மையை உறுதி செய்ய, சோதனை மின்அளவீட்டின் மூலமாக உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துல்லியமான மின் கணக்கீட்டை உறுதி செய்வதன் மூலம், நுகர்வோர்களின் தேவையற்ற புகார்களை தவிர்க்கலாம். மேலும் இது போன்ற புகார்கள் வராமல் இருக்கும் நிலையை உருவாக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.