கேரளாவில் மின்சார பயன்பாடு கட்டுப்பாடு அமல்

கேரள மாநிலத்தில் அதிக வெப்பம் காணப்படுவதால் மின் கட்டுப்பாட்டு நடவடிக்கையை கேரளம் மாநிலம் மின்வாரியம் மேற்கொண்டுள்ளது. நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நேரத்தில் கேரளாவில் வெப்பத்தாக்குதலால் பல்வேறு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் மின் நுகர்வு அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மின் கட்டுப்பாடு நடவடிக்கையை மேற்கொள்ள கேரள மாநில முடிவெடுத்துள்ளது. அதன்படி மின் நுகர்வு அதிகமான பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பெரிய அளவிலான தொழில் நிறுவனங்கள் இரவு 10 […]

கேரள மாநிலத்தில் அதிக வெப்பம் காணப்படுவதால் மின் கட்டுப்பாட்டு நடவடிக்கையை கேரளம் மாநிலம் மின்வாரியம் மேற்கொண்டுள்ளது.

நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நேரத்தில் கேரளாவில் வெப்பத்தாக்குதலால் பல்வேறு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் மின் நுகர்வு அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மின் கட்டுப்பாடு நடவடிக்கையை மேற்கொள்ள கேரள மாநில முடிவெடுத்துள்ளது. அதன்படி மின் நுகர்வு அதிகமான பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பெரிய அளவிலான தொழில் நிறுவனங்கள் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். வணிக நிறுவனங்கள் ஒன்பது மணிக்கு பிறகு அலங்கார விளக்குகள் மற்றும் விளம்பரப் பலகைகளை அணைக்க வேண்டும். வீட்டு உபயோகிப்பாளர்கள் 26 டிகிரிக்கு மேல் ஏசிகளை அமைக்க வேண்டும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக பாலக்காடு வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் ஒழுங்குபடுத்தப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் முடிந்தவரை ஒத்துழைக்க வேண்டும் என கேரள மின்வாரியம் வலியுறுத்தி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu