மழையில் இருந்து மின்சார உற்பத்தி - புதிய கண்டுபிடிப்பு

வெயில் காலத்தில், சூரிய சக்தியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதை போல, மழைத்துளிகளின் மூலம் மின்சார உற்பத்தியில் ஈடுபட முடியும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது. சீனாவை சேர்ந்த சிங்ஹூவா பல்கலைக்கழகம், மழைத்துளிகளில் இருந்து மின்சாரத்தை தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தது. தற்போது, திரவத்திலிருந்து மின்சாரத்தை தயாரிக்கும் ட்ராப்லட் ட்ரைப்போ எலக்ட்ரிக் நானோ ஜெனரேட்டர் ( D-TENG) கருவியை வெற்றிகரமாக தயாரித்துள்ளது. இந்த கருவியின் செல்கள் மீது மழைத்துளிகள் விழும் போது […]

வெயில் காலத்தில், சூரிய சக்தியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதை போல, மழைத்துளிகளின் மூலம் மின்சார உற்பத்தியில் ஈடுபட முடியும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது.

சீனாவை சேர்ந்த சிங்ஹூவா பல்கலைக்கழகம், மழைத்துளிகளில் இருந்து மின்சாரத்தை தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தது. தற்போது, திரவத்திலிருந்து மின்சாரத்தை தயாரிக்கும் ட்ராப்லட் ட்ரைப்போ எலக்ட்ரிக் நானோ ஜெனரேட்டர் ( D-TENG) கருவியை வெற்றிகரமாக தயாரித்துள்ளது. இந்த கருவியின் செல்கள் மீது மழைத்துளிகள் விழும் போது ஏற்படும் இயந்திர ஆற்றல், மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது. இந்த மின் ஆற்றலை மின்கலனில் சேமித்து பயன்படுத்த முடியும். இதற்காக தனிப்பட்ட கருவிகள் தேவையில்லை. ஏற்கனவே அமைக்கப்பட்ட சோலார் பேனல்கள் மூலமே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதாவது, சோலார் பேனல்களை அடர்த்தியாக அடுத்தடுத்து இணைப்பு கொடுத்து வைப்பதன் மூலம் மழைத்துளியில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். எனவே, இது மிகவும் எளிமையான வழிமுறையாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், சோலார் பேனல் அமைப்பதன் மூலம், மழை மற்றும் வெயில் என 2 நேரங்களிலுமே மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu