ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய எலான் மஸ்க் - உயர் அதிகாரிகள் பணி நீக்கம்

October 28, 2022

ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்த இன்று கடைசி நாள் இன்று தீர்மானிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று ஒப்பந்தத்தின்படி சுமார் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர், ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்துவது உறுதியான நிலையில், நேற்று கை கழுவ பயன்படுத்தும் தொட்டியுடன் ட்விட்டர் அலுவலகத்திற்கு அவர் சென்றார். அந்த காணொளி பரவலாக பரப்பப்பட்டதுடன், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர், ட்விட்டர் நிறுவனத்தின் முழு கட்டுப்பாடும் தனக்கு வந்துள்ளதை வெளிப்படுத்தும் […]

ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்த இன்று கடைசி நாள் இன்று தீர்மானிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று ஒப்பந்தத்தின்படி சுமார் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர், ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்துவது உறுதியான நிலையில், நேற்று கை கழுவ பயன்படுத்தும் தொட்டியுடன் ட்விட்டர் அலுவலகத்திற்கு அவர் சென்றார். அந்த காணொளி பரவலாக பரப்பப்பட்டதுடன், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் பின்னர், ட்விட்டர் நிறுவனத்தின் முழு கட்டுப்பாடும் தனக்கு வந்துள்ளதை வெளிப்படுத்தும் விதமாக, எலான் மஸ்க், அவரது ட்விட்டர் கணக்கின் பயோவை “Chief Twit” என்று மாற்றியுள்ளார். இந்த நிறுவனத்தை அவர் கையகப்படுத்த “கருத்து சுதந்திரம்” முக்கிய காரணமாக இருந்தது. அந்த வகையில், கருத்து சுதந்திரத்தை ட்விட்டர் நிறுவனம் தற்போது பெற்றுள்ளது என்பதை குறிக்கும் வகையில், ‘பறவை இப்போது விடுவிக்கப்பட்டுள்ளது’ என்று பொருள்படும் “The Bird is Freed” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்திய சில மணி நேரங்களிலேயே அவர் அதிரடியான சில முடிவுகளை எடுத்துள்ளார். குறிப்பாக, நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் நான்கு பேரை பணி நீக்கம் செய்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாரக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெத்செகல், உயர்மட்ட சட்ட நிர்வாகி விஜயா காடே மற்றும் பொது ஆலோசகர் ஜீன் எட்ஜெட் ஆகிய நான்கு பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில், ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்று எலான் மஸ்க் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாரக் அகர்வால் ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் கூட்டத்தில் முன்னர் உரையாற்றிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அதில், “எலான் மஸ்க் தலைமையில் ட்விட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றதாக மாற வாய்ப்புள்ளது. நிறுவனம் அவர் கைகளுக்கு சென்றால், அதன் பாதை எந்த திசையில் செல்லும் என்று எங்களுக்கே தெரியாது” என்று பேசி உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu