ட்விட்டர் நிர்வாகக் குழுவை கலைத்த எலான் மஸ்க்

November 1, 2022

டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், கடந்த மே மாதத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்தார். பின்னர், ட்விட்டர் நிறுவனம் முறையான தகவல்களை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி, ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கினார். இந்த விவகாரம் பல்வேறு கட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. உலக அளவில் கவனம் ஈர்த்த இந்த விவகாரத்தில், சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை இறுதியாக எலான் மஸ்க் கைப்பற்றினார். அதைத்தொடர்ந்து அவர் நிறுவனத்தின் […]

டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், கடந்த மே மாதத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்தார். பின்னர், ட்விட்டர் நிறுவனம் முறையான தகவல்களை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி, ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கினார். இந்த விவகாரம் பல்வேறு கட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. உலக அளவில் கவனம் ஈர்த்த இந்த விவகாரத்தில், சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை இறுதியாக எலான் மஸ்க் கைப்பற்றினார். அதைத்தொடர்ந்து அவர் நிறுவனத்தின் உயர் பதவியில் இருந்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார்.

குறிப்பாக, நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாரக் அகர்வால், நிதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே மற்றும் பொது ஆலோசகர் சீன் எட்கல் ஆகியோர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர். தற்போது, அவர்களுக்கு ‘கோல்டன் பாராசூட்’ முறையை அமலாக்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளில் எலான் மஸ்க் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவை அவர் கலைத்துள்ளார். குழுவில் உள்ள இருந்த அனைத்து உறுப்பினர்களும் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், ட்விட்டர் நிறுவனத்தின் ஒற்றை இயக்குனராக தன்னைத்தானே அவர் அறிவித்துக் கொண்டுள்ளார். அதன் பொருட்டு, ஏற்கனவே தனது பயோவை “Chief Twit” என்று மாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu