ஓபன் ஏஐ நிறுவனம் மீது எலான் மாஸ்க் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஓபன் ஏஐ மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மீது அமெரிக்க தொழிலதிபர் எலான் மாஸ்க் வழக்கு தொடர்ந்து உள்ளார். ஒப்பந்த மீறல், மைக்ரோசாப்ட் உடன் இணைந்து பாகுபாடான வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்ற போன்ற செயல்களில் ஓபன் ஏஐ ஈடுபட்டதாக மஸ்க் வழக்கு ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிறுவனம் உருவாக்கப்பட்ட நோக்கத்துக்கு மாறாக செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஓபன் சாட் ஜிபிடி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் 3.5-வது வெர்ஷன் வரை பயனர்களுக்கு இலவச சேவையை அனுமதித்தது. ஜிபிடி 4 வெர்ஷனுக்கு கட்டணம் வசூலித்து வருகிறது. இந்தியாவில் தற்போது 1650 பேர் கட்டண சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.