டுவிட்டர் செயலியை வாங்கியது தொடர்பாக எலான் மஸ்க் மீது வழக்கு தொடரப்பட்டு, அவருக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், 2022 ஏப்ரல் 4-ம் தேதி டுவிட்டர் செயலியை வாங்கப் போவதாக அறிவித்தார். 2022 அக்டோபரில் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை கையகப்படுத்தினார். இதன் காரணமாக, டுவிட்டரின் பங்கு மதிப்பு 27% உயர்ந்தது. அதற்கு முன்னதாக, மஸ்க் டுவிட்டரின் 5% பங்குகளை வாங்கியிருந்தார். அமெரிக்க சட்டத்தின்படி, ஒருவர் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கினால், 10 நாட்களுக்குள் தகவல் வெளியிட வேண்டும். ஆனால், மஸ்க் 11 நாட்கள் தாமதமாக தகவல் வெளியிட்டார். இதனால் குறைந்த விலையில் டுவிட்டரை வாங்க முடிந்தது. இது மற்ற பங்குதாரர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக எஸ்.இ.சி. கூறியது. இதனால், மஸ்க் மீது வழக்கு தொடரப்பட்டு, அவருக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.