பேபால் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த எலான் மஸ்க், ஒரு சதித்திட்டத்தின் காரணமாக தனது பதவியை இழந்தார். இதன் மூலம் அவர் திவால் நிலையின் விளிம்பிற்கு தள்ளப்பட்டார். இருப்பினும், பேபால் நிறுவனத்தை விற்றதில் கிடைத்த 250 மில்லியன் டாலர்களை கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கி, உலகப் பணக்காரராக வலம் வருகிறார்.
ஆனால், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தொடக்கத்தில் பல தோல்விகளை சந்தித்தது. பல ராக்கெட் ஏவுதல்கள் தோல்வியில் முடிந்ததால் நிறுவனம் நிதி நெருக்கடியை எதிர்கொண்டது. 2008 ஆம் ஆண்டு, நிறுவனம் திவாலாகிவிடும் நிலையில் இருந்தபோது, முன்னாள் பேபால் ஊழியர்கள் தலைமையிலான நிறுவனர் நிதி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் 20 மில்லியன் டாலர்களை முதலீடு செய்தது. இந்த முதலீட்டின் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது முதல் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ஸ்பேஸ் எக்ஸ்நிறுவனத்துடன் 1.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன் மூலம் எலான் மஸ்க் தனது தோல்விகளை மீறி, சாதனை படைத்துள்ளார்.














