பிரேசிலில் ஒரு மாதத்திற்கு பிறகு 'எக்ஸ்' மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
பிரேசில் உச்ச நீதிமன்றம் 'எக்ஸ்' தளத்திற்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டிமோரேஸ், 24 மணி நேரத்திற்குள் 'எக்ஸ்' தளத்தை முடக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க தேசிய தகவல் தொடர்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். ஆனால், சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு, 'எக்ஸ்' மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. பிரேசிலிய சட்டங்களுக்கிணங்க, 'எக்ஸ்' நிறுவனம் 5.1 மில்லியன் டாலர் (சுமார் ரூ.42 கோடி) அபராதம் செலுத்திய பிறகு, உச்ச நீதிமன்றம் தடையை நீக்கும் முடிவுக்கு வந்தது. மேலும், பிரேசிலின் டெலிகாம் ரெகுலேட்டர் அனடெல், 24 மணி நேரத்திற்குள் 2 கோடி பயனர்களுக்கு சேவையை மீட்டெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.














