எலான் மஸ்க் நியூரோலிங் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், மனித உடல் சம்பந்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், மனித மூளையில் சிப் ஒன்றை பொருத்தி ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. தற்போது, சிப் பொருத்தப்பட்ட முதல் மனிதர் நலமுடன் இருப்பதாக எலான் மஸ்க் இன்று அறிவித்துள்ளார்.
நரம்பியல் சம்பந்தப்பட்ட குறைபாடுகளை களையும் நோக்கில், நியூரோலிங் நிறுவனம் பல்வேறு ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், மனித மூளையில் சிப் பொருத்தப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், சிப் பொருத்தப்பட்ட நபரிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்கள் தெரிவதாக எக்ஸ் சமூக தளத்தில் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். மேலும், நியூரோலிங் தயாரித்த இந்த தொழில்நுட்பத்துக்கு ‘டெலிபதி’ என பெயரிட்டுள்ளார். எதிர்காலத்தில் நரம்பியல் சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்களை தடுப்பதில் இந்த ஆராய்ச்சி முக்கிய பங்கு வகிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.