நெதர்லாந்தின் ரேடியோ வானியல் நிறுவனமான ASTRON-ல் உள்ள விஞ்ஞானிகள் எலான் மஸ்க்கின் புதிய ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் குறித்து கடும் கவலை தெரிவித்துள்ளனர். உலகெங்கும் வேகமான இணையத்தை வழங்கும் இந்த செயற்கைக்கோள்கள், வானியல் ஆராய்ச்சியில் பெரும் தடையாக இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இரண்டாம் தலைமுறை ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள், முதல் தலைமுறையை விட 32 மடங்கு அதிகமான ரேடியோ அலைகளை வெளியிடுகின்றன. இதனால், LOFAR போன்ற ரேடியோ தொலைநோக்கிகள் செயல்பட முடியாமல் போகின்றன. இந்த செயற்கைக்கோள்களின் கதிர்வீச்சு, வானியல் நிகழ்வுகளை விட மில்லியன் கணக்கான மடங்கு அதிகமாக இருப்பதால், வானியல் ஆராய்ச்சியாளர்கள் தரவுகளை சேகரிப்பதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வாரந்தோறும் சுமார் 40 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருவதால், இந்த பிரச்சனை மேலும் தீவிரமடைந்து வருகிறது. எனவே, செயற்கைக்கோள் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் இணைந்து செயல்பட்டு, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.