அமீரகத்தில் குடியிருப்பு விசா காலாவதியாகி தங்கி இருப்பவர்களுக்கு அபராதம் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமீரகம் கூறியிருப்பதாவது, குடியிருப்பு விசா காலாவதியான பின்பும் அமீரகத்தில் தங்கி இருப்பவர்கள் தங்களது நிலையை மாற்றிக் கொள்வதற்காக பொதுமனிப்பு வழங்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு இரண்டு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இந்த பொது மன்னிப்பு நடைமுறைக்கு வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி விசா விதி மீறலில் ஈடுபட்டவர்கள் அபராத தொகை செலுத்தாமல் சொந்த ஊருக்கு திரும்பி செல்லவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
பொது மன்னிப்பு தொடர்பான விதிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பான விரிவான விதிமுறைகள் விரைவாக வழங்கப்பட உள்ளது. அதோடு விசா காலம் முடிந்தவர்கள் தங்களுடைய விசாவை புதுப்பித்துக் கொள்ள ஆறு மாத கால சலுகை வழங்கப்படுகிறது.