அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை, ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மூன்றாவது முறையாக ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் பதில் மனு தாக்கல் செய்யாததால் நீதிபதி அல்லி அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் அமலாக்க துறை இதற்கான பதில் மனுவினை தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து ஜாமின் மனு மீதான விசாரணையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.