டெஸ்லா நிறுவனத்தின் ரோபோ ஒன்று தாக்கியதில் ஊழியர் ஒருவர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
டெஸ்லா கார் நிறுவனத்தில், உதிரி பாகங்களை எடுப்பது, நகர்த்துவது போன்ற பணிகளை மேற்கொள்ள ரோபோக்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, ரோபோ ஒன்றை அசெம்பிள் செய்து கொண்டிருந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்படவே, ரோபோ பொறியாளரை தாக்கியுள்ளது. இது தொடர்பான காணொளி தற்போது வெளிவந்துள்ளது. அந்தக் காணொளியில், ரோபோ தனது நகங்களால் பொறியாளரை தாக்குவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் கடந்த 2021 ஆம் ஆண்டு நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில், உணவகங்கள் போன்ற இடங்களில் ரோபோக்களை பணியமர்த்துவது அதிகரித்து வந்த சூழலில், இது போன்ற காணொளி வெளியிடப்படாமல் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.