நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இளநிலை மருத்துவர்கள் மருத்துவர்களுக்கு சம்பள உயர்வு என்று இங்கிலாந்து சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் இளநிலை மருத்துவர்கள் சம்பள உயர்வு கோரி கடந்த பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு 35 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதே கோரிக்கையை முன்வைத்து ரயில்வே, விமான போக்குவரத்து உட்பட பல்வேறு துறையினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபடுவோருடன் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்று அரசு திட்டவட்டமாக கூறியது.
இங்கிலாந்தின் பொருளாதாரம் மிகவும் நலிவுற்று உள்ளது. இந்நிலையில், 35 சதவீத சம்பள உயர்வு வழங்கினால் அது பொருளாதாரத்தை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும், நாடு முழுவதும் இளநிலை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் நோயாளிகள் கடும் பாதிப்படைகின்றனர்.
இந்த நிலையில், முதலாம் ஆண்டு பயிற்சி மருத்துவர்களுக்கு 10.3% சதவீதமும், இளநிலை மருத்துவர்களுக்கு 8.8% சதவீதமும், மருத்துவ ஆலோசகர்களுக்கு 6 சதவீதமும் சம்பள உயர்வு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் கணிசமான சம்பள உயர்வோடு பணவீக்கமும் கட்டுப்பாட்டில் இருக்கும் என கருதப்படுகிறது. அரசியல் இந்த அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இளநிலை மருத்துவர்கள் பயனடைவார்கள் என்று இங்கிலாந்து சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.