இங்கிலாந்தின் நீண்ட நாள் ராணியான இரண்டாம் எலிசபெத், அண்மையில் காலமானார். தற்போது இரண்டாம் சார்லஸ் புதிய மன்னராகப் பதவி ஏற்க உள்ளார். எனவே, இதுவரை ராணியை மையப்படுத்தி அமைக்கப்பட்டிருந்த நாட்டின் தேசிய கீதம், கரன்சி, பாஸ்போர்ட் உள்ளிட்டவை, தற்போது மன்னரை முன்னிறுத்தி மாற்றப்பட உள்ளன என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் தேசிய கீதத்தில் 'காட் சே தி குயின்' என்ற வரிகள் இடம்பெற்றிருக்கும். தற்போது, அந்த வரிகள் 'காட் சேவ் தி கிங்' என்று மாற்றப்பட உள்ளன. மேலும், ராணி எலிசபெத்தின் புகைப்படம் இடம்பெற்றுள்ள அந்நாட்டின் நாணயங்கள், அஞ்சல் தலைகள், பாஸ்போர்ட்டுகள், கரன்சிகள் போன்றவற்றில் இனிமேல், புதிய மன்னர் சார்லஸ் இன் புகைப்படம் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் புதிய நாணயங்கள் மற்றும் கரன்சிகள் புழக்கத்தில் விடப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
அத்துடன், வேல்ஸ் அரச பரம்பரையின் கொடியிலும் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. மேலும், அரச பரம்பரையினர் வகிக்கும் பதவிகளிலும் மாற்றம் செய்யப்படவுள்ளது. குறிப்பாக, புதிய மன்னர் சார்லஸ் இன் இரண்டாவது மகன் ஹாரி, அரச பரம்பரையில் இருந்து வெளியேறினாலும், அவரது வாரிசுகளுக்கு அரச பரம்பரைப் பதவிகள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.