மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு பரிந்துரை செய்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் இதன் பணிகள் நீண்ட நாட்கள் துவங்கப்படாமல் இருந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியாகியது. அதன்படி டெண்டர் எல்& டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து கடந்த மார்ச் 14ஆம் தேதி கட்டுமான பணிகள் துவங்கிய நிலையில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் இருந்தது. இதனை தொடர்ந்து கடந்த இரண்டாம் தேதி சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆய்வறிக்கையை தமிழக சுற்றுச்சூழல் துறையிடம் நிர்வாகம் சமர்ப்பித்திருந்தது. அதனை அடுத்து சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என்று கடந்த பத்தாம் தேதி அனுமதி வழங்க பரிந்துரை வழங்கியது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியுள்ளது














