தமிழ்நாடு சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம், 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.525 கோடிக்கு கட்டுமான அனுமதி வழங்கியுள்ளது
2024 பிப்ரவரி மாதத்தில், அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், முட்டுக்காடு பகுதியில் சர்வதேச கண்காட்சிகள் மற்றும் பன்னாட்டு கூட்டங்களுக்கு ஏற்ப புனரமைக்கப்பட்ட உலகத்தரமான கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படுவதாக அறிவித்தார். இந்த திட்டத்தில், 5,000 இருக்கைகளுடன் மாநாட்டுக் கூடம், 10,000 பேருக்கு ஏற்ற அரங்கம் மற்றும் கட்டுமான பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது. சாலை வசதி, சுற்றுச்சுவர், நுழைவு வாயில் உள்ளிட்ட வெளிப்புற பணிகள் ரூ.105 கோடியில் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம், 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.525 கோடிக்கு கட்டுமான அனுமதி வழங்கியுள்ளது. 2025-2026 ஆண்டுகளில் கட்டுமானம் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.