சனிக்கிழமை அன்று, பிஎஸ்எல்வி சி54 ராக்கெட் மூலம், விண்ணில் செலுத்தப்பட்ட இந்தியாவின் நானோ செயற்கைக்கோள் ஈ ஓ எஸ் 06, புகைப்படங்களை எடுத்து அனுப்பும் பணியை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
நேற்று, இந்த செயற்கைக்கோள் மூலம் முதல் புகைப்படம் பெறப்பட்டது. இமாலயப் பகுதி, குஜராத்தின் கட்ச் பகுதி மற்றும் அரேபிய கடல் பகுதி ஆகியவற்றின் புகைப்படங்களை இந்த செயற்கைக்கோள் எடுத்து அனுப்பியுள்ளது. இந்த புகைப்படங்கள் ஓசன் கலர் மானிட்டர் (OCM) மற்றும் சீ சர்பேஸ் டெம்பரேச்சர் மானிட்டர் (SSTM) சென்சார்கள் மூலம் எடுக்கப்பட்டதாக இஸ்ரோ ட்விட்டரில் தெரிவித்துள்ளது. இந்த புகைப்படங்களை இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் காணொளி வாயிலாக வெளியிட்டார். இந்த நிகழ்வில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.