கேரள மாநிலத்தில் நைல் காய்ச்சல் பரவி வருவதால் மூன்று மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு காய்ச்சல்கள் பரவி வருகின்றன. இதனால் அங்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் ஏராளமானோர் நோய் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சிகிச்சை காக அனுமதிக்கப்பட்டனர். அதில் அவர்களுக்கு நடத்திய பரிசோதனையில் நைல் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கியூ லெக்ஸ் கொசுக்களால் பரவும் தொற்று நோயாகும். இந்த காய்ச்சல் ஜப்பானிய காய்ச்சலை போன்றதாகும். ஆனால் அந்த காய்ச்சலை போன்று மிகவும் ஆபத்தானது அல்ல. இதுபொதுவாக பெரியவர்களை தாக்கும். ஆனால் தற்போது சிறியவர்களுக்கு நைல் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நைல் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை பெற வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது