ஒமைக்ரானின் எக்ஸ்பிபி1.16 எனப்படும் ஆர்க்டரஸ் திரிபு இந்தியாவில் வேகமாக பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒமைக்ரானின் எக்ஸ்பிபி1.16 எனப்படும் ஆர்க்டரஸ் திரிபு இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்களிடையே இந்த வகை கரோனா வைரஸ் மனிதனின் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஊடுருவும் தன்மைகொண்டது என்பதால் வரவிருக்கும் நான்கு வாரங்கள் அதன் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மிக முக்கியமான காலக்கட்டம் என உலகெங்கிலும் உள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சக தரவுகளின்படி, நேற்று காலை நிலவரப்படி 9,111 பேர் எக்ஸ்பிபி 1.16 வகை கரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 60,313-ஆக உயர்ந்துள்ளது. மேலும் பிஏ2.10.1 மற்றும் பிஏ.2.75 ஆகியவற்றின் ஒருங்கிணைந்த திரிபாகவே எக்ஸ்பிபி1.16 அடையாளம் காணப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.