ஈகுவடார் நாட்டில், திங்கட்கிழமை அன்று மேலும் ஒரு அரசியல் படுகொலை நிகழ்ந்துள்ளது. கடந்த வாரத்தில் அந்நாட்டின் அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ வில்வசென்சியோ சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத்தொடர்ந்து, மற்றொரு படுகொலை நடந்துள்ளது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி, ஈகுவடார் நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து அரசியல் படுகொலைகள் நிகழ்ந்து வருவது அந்நாட்டின் மீது சர்வதேச கவனத்தை குவித்துள்ளது. திங்கட்கிழமை, ஆர் சி கட்சியை சேர்ந்த பெட்ரோ ப்ரோயன்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அதனை மற்றொரு அதிபர் வேட்பாளர் லூயிசா கான்ஸ்லெஸ் உறுதி செய்துள்ளார்.