துருக்கியில் மே 14ஆம் தேதி தேர்தல் - எர்டோகன் அறிவிப்பு

January 23, 2023

துருக்கி நாட்டில், வரும் மே 14 ஆம் தேதி, நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதிபர் பதவிக்கான தேர்தல் ஆகியவை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய அதிபர் ரிசப் தாயீப் எர்டோகன், சனிக்கிழமை, பூர்சா நகரில் நடைபெற்ற இளைஞர் அணி மாநாட்டில், இந்த அறிவிப்பை தெரிவித்தார். மேலும், இந்த தேர்தலில் எந்த ஒரு வேட்பாளருக்கும் 50% வாக்குகளுக்கு மேல் கிடைக்கவில்லை என்றால், மே 28 ஆம் தேதி மறு தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். எர்டோகன், முதலில் […]

துருக்கி நாட்டில், வரும் மே 14 ஆம் தேதி, நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதிபர் பதவிக்கான தேர்தல் ஆகியவை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய அதிபர் ரிசப் தாயீப் எர்டோகன், சனிக்கிழமை, பூர்சா நகரில் நடைபெற்ற இளைஞர் அணி மாநாட்டில், இந்த அறிவிப்பை தெரிவித்தார். மேலும், இந்த தேர்தலில் எந்த ஒரு வேட்பாளருக்கும் 50% வாக்குகளுக்கு மேல் கிடைக்கவில்லை என்றால், மே 28 ஆம் தேதி மறு தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

எர்டோகன், முதலில் துருக்கி நாட்டு பிரதமராக பதவி வகித்து வந்தார். அதன் பின்னர், தற்போது, அதிபராக உள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பிரதமரை விட அதிபருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுவது போன்று சட்டம் இயற்றினார். மேலும், பிரதமர் மற்றும் அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு ஒரே நாளில் நடைபெறவும் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில், தற்போது நடைபெற இருக்கும் தேர்தல் கவனம் பெறுகிறது. மேலும், நாட்டின் பொருளாதார நிலை சரிவை சந்தித்து வருவதால், எர்டோகனுக்கு இந்த தேர்தல் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu