தனித்த 5ஜி சேவைகளுக்காக, ரிலையன்ஸ் ஜியோவுடன் கைகோர்த்துள்ள எரிக்சன் நிறுவனம்

October 17, 2022

தொலைத்தொடர்பு கியர் உற்பத்தியாளரான எரிக்சன் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன், நீண்ட கால அடிப்படையில், தொழில் கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டில், தனித்த 5ஜி சேவைகளை (Standalone 5G) வழங்குவதற்காக இந்த கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்படுத்தப்படும் முதல் ஒப்பந்தம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி, “ஜியோ நெட்வொர்க்கின் 5ஜி சேவைகளுக்காக, எரிக்சன் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். […]

தொலைத்தொடர்பு கியர் உற்பத்தியாளரான எரிக்சன் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன், நீண்ட கால அடிப்படையில், தொழில் கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டில், தனித்த 5ஜி சேவைகளை (Standalone 5G) வழங்குவதற்காக இந்த கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்படுத்தப்படும் முதல் ஒப்பந்தம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பேசிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி, “ஜியோ நெட்வொர்க்கின் 5ஜி சேவைகளுக்காக, எரிக்சன் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை, இந்தியாவை டிஜிட்டல் மயம் ஆக்குவதில் பெரும்பங்கு வகிக்கும்” என்று கூறினார். மேலும், “ஜியோவின் ஸ்டாண்ட் அலோன் 5ஜி நெட்வொர்க், ஒரு தொழில்நுட்ப புரட்சியாகும்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய எரிக்சன் நிறுவனத்தின் தலைவர் போர்ஜே ஏக்ஹோம், “உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் கட்டமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது. இதன் மூலம், புதுமையான படைப்புகள், வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில்கள் உருவாகும். இதற்காக, ஜியோ நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். எரிக்சன் நிறுவனத்தின் ஸ்டாண்ட் அலோன் இணைப்பு மூலம் இந்தியாவின் டிஜிட்டல் கனவுகள் நனவாகும் என்று நம்புகிறோம்” என கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu