ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 96 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனவரி 31-ம் தேதி முதல் வேட்புமனுக்கல் தாக்கல் செய்து வருகிறார்கள். இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று நிறைவு பெற்றது. இதில் 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வரும் 10-ம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம். அன்று பிற்பகல் 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்புமனுதாக்கல் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் பரிசீலனை நடைபெறுகிறது.