எத்தியோப்பியாவில் லாரி ஆற்றுப் பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 64 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
எத்தியோப்பியாவின் கிராமப்புறங்களில் சமூக நிகழ்வுகளுக்கான போக்குவரத்துக்கு பேருந்துகளைப் பயன்படுப்பதைவிட, லாரிகளை வாடகைக்கு எடுப்பது பொதுவான நடைமுறையாக உள்ளது. அவை மலிவான விலையில் கிடைப்பதன் காரணமாக, மக்கள் பெரும்பாலும் இவ்வாறு பயணம் செய்கிறார்கள். இந்நிலையில், தெற்கு எத்தியோப்பியாவின் சிடாமா பகுதியில், ஒரு திருமண நிகழ்வுக்காக 70க்கும் மேற்பட்டோர் லாரியில் பயணித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், லாரி ஆற்றுப் பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 64 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இருவர் உயிரிழந்தபோது, பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்தது. தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.