உக்ரேனுக்கு சுமார் 4.5 லட்சம் கோடி நிதி உதவி அளிக்க ஐரோப்பிய யூனியன் முன்வந்துள்ளது.
உக்ரைன் போரால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கு 5000 கோடி யூரோ நிதியுதவி அளிக்கும் திட்டத்திற்கு ஐரோப்பிய யூனியன் நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்யப் போவதாக உறுப்பு நாடான ஹங்கேரி நீண்ட நாட்களாக மிரட்டி வந்தது. அனைத்து உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே இந்த திட்டத்தை அமலுக்கு கொண்டு வர முடியும். எனவே ஹங்கேரிக்கு எந்த வகையான சலுகை அளிக்கப்பட்டது என்பது குறித்த விவரம் கூறப்படவில்லை.
இது குறித்து ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், உக்ரேனுக்கு நிதி உதவி அளிக்கும் விவகாரத்தில் ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் இடையே ஒருமித்த முடிவு ஏற்பட்டு விட்டது. உக்ரேனுக்கு நிலையான நிதி உதவி வழங்க அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டன. உக்ரைனுக்கு உதவுவதில் ஐரோப்பிய யூனியன் முன்னிலை வகித்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.