பிரசெல்ஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் தேர் லேயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெல்ஜியம் தலைநகர் பிரசெல்சில் நேற்று இரவு பெல்ஜியம் ஸ்வீடன் இடையே கால்பந்து அணிகள் யூரோ சாம்பியன்ஷிப் பகுதி சுற்றி போற்றி நடந்தது. போட்டி நடந்த மைதானத்தில் இருந்து சிறிது தூரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் அங்கு சாலையில் நடந்து சென்றவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் ஸ்வீடனை சேர்ந்த இரண்டு கால்பந்து ரசிகர்கள் பலியாகினர். மூன்று பேர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் வந்தனர். பின்னர் விசாரணையில் இது பயங்கரவாத தாக்குதல் என்று தெரியவந்தது. தாக்குதல் நடத்திய அந்த வாலிபர் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது, எனது பெயர் ஆபதசேலம் அல் குயிலானி. நான் ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவன். நான் ஸ்வீடன் நாட்டவரை கொன்று உள்ளேன் என்று கூறினான். இதனால் பெல்ஜியத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலால் கால்பந்து போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. தாக்குதல் நடத்திய நபரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் துனிசியா வம்சாவளியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் கூறும் போது, இந்த தாக்குதல் ஸ்வீடன் குடிமக்கள் மீது நடைபெறும் பயங்கரவாத தாக்குதல் ஆகும். என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மேலும் அவர் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் தேர் லேயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.